பத்தில் போர்த்திய ஆடைக்கு
பதினெட்டு யன்னல் வைத்து
பதினெட்டு யன்னல் வைத்து
இருபதில் உடுப்பவள்
பெண்ணியம் பேசுகிறாள்,
அங்கம் மறைத்து ஆடை அணிவது
அடக்குமுறையாம்...
கடைசிக் காதலியை கைவிட்டவன்
களவை மறைக்க
காரணம் சொன்னான்,
காதலிக்கு கள்ளத் தொடர்பாம்...
பெண்ணைக் கொடுக்க
சீதனம் கசக்குது
பெண்ணை எடுக்க
சீதனம் இனிக்குது
அடங்கிப் போவது பெண்மையாம்...
அடக்கிப் போடுவது ஆண்மையாம்...
பொன்னையும் பெண்ணையும்
துறக்கச் சொல்லி,
பொன்னில் வீடும்
பெண்ணில் படுக்கையும்
செய்வது
ஆன்மீகத்தின் ஓர் அங்கமாம்
அது ஆசையின் அடிமைத் தனம்
அல்லவாம்...
ஆயுதம் விற்பது
அரச அலுவல்
ஆளைக் கொள்வது
உரிமை மீறல்
வல்லரசுக்கு வக்கிர புத்தி
இல்லவே இல்லையாம்...
பயங்கரவாதத்தை
பகிரங்கமாய் எதிர்த்து
பகிரங்க இரகசியமாய்
பயங்கரம் செய்வது,
இராஜதந்திர காய் நகர்த்தலாம்...
அதுவே அந்நாட்டின் இறைமையாம்...
கண்டதைச் சொல்லி
சொன்னதை முடிக்கு முன்
என் கண்ணாடிக் கூட்டிலும்
கண்டேன் கற்களை,
உண்மை கசப்பது
உண்மை தானே ....!!!
12 comments:
ஏன் தம்பி இவ்ளோ சின்ன வயதிலே உனக்கு இதனை வருத்தம் ??
@ sandhya said... சும்மா, கண்டு சும்மா இருக்க முடியவில்லை அக்கா, அதான்.. :P
sudum kavithai!
உண்மை என்று எதுவும் இல்லை.. எல்லாமே போயின் பிம்பங்கள்..
தேர்ந்த எழுதும்.. சிந்தனையும் பாராட்டுக்கள்
@ கே.ஆர்.பி.செந்தில் and வழிப்போக்கன்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள்
சும்மா சந்து போந்து பார்க்காம எல்லா பக்கமும் பூந்து எழுதி இருக்கீங்க! ஆனால் உங்கள் வருத்தம் நியாயம்தான்!
// கண்டதைச் சொல்லி
சொன்னதை முடிக்கு முன்
என் கண்ணாடிக் கூட்டிலும்
கண்டேன் கற்களை... //
நல்ல வரிகள்!
//அங்கம் மறைத்து ஆடை அணிவது அடக்கு முறையாம்..//
சரியாகச்சொன்னிங்க.
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்
//Software Engineer said...//
//துரோகி said...//
//Riyas said...//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழர்களே... உங்கள் ஒத்துழைப்பு தொடரட்டும் :)
வருத்தம்,கோபம்,ஆதங்கம் அனைத்தும் கலந்த உணர்வுகளை அழகிய கவிதையாக வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.
//பெண்ணைக் கொடுக்க
சீதனம் கசக்குது
பெண்ணை எடுக்க
சீதனம் இனிக்குது
அடங்கிப் போவது பெண்மையாம்...
அடக்கிப் போடுவது ஆண்மையாம்..//
மிக அழகான வார்த்தைகள்... வாழ்த்துக்கள் தம்பி...
//ஸாதிகா said...//
//புஷ்பா said...//
உங்கள் கருத்துகளிற்கு மிக்க நன்றி, ஒத்துழைப்பு தொடரட்டும்
Post a Comment