தலைப்புக்களுக்காய் தவமிருந்தாலும்
கற்பனைகளை கடத்திச் செல்கிறது...
உன் கண்கள் காழும் கதிர்ப்பும்
அதன் வழி வரும் ஈர்ப்பும்...
உன் புன்னகை பொசியும் அதிர்வுகள்
என் செவியுள் இசையாய் எதிரொலிக்க...
பகையாய் என்னை எதிர்கொள்கிறது
நெஞ்சை நொறுக்கும் ஏக்கங்கள்...
உன் கண்களில் கசியும் கண்ணீரில்
என் அங்கம் இங்கு கரைந்து போனால்
கண்ணீர் துடைக்க கரங்கள் ஏது...
அச்சம் கொள்கிறது எந்தன் மனது...
உன்னை வாட்டும் வலிகள் வந்தால்
இதயத்துடிப்பும் எனக்கு வலிக்க
தொடர்ந்து துடிக்க வழிகள் தேடும்...
உன்னைக் காக்கும் எந்தன் மனது...
இரவும் பகலும்
காட்சிகள் என்னைக் கடந்து செல்ல...
காதல் கட்டிப் போட்ட கண்களில்
கணம் தோறும் நான் காணும்
ஒற்றை விம்பம் நீ...
மறக்க நினைக்கும் போதெல்லாம்
நினைவுகளின் உச்சம் வரை
உயர்ந்து செல்லும்
இளநீல வானம் நீ...
வெறுத்தாலும் முறைத்தாலும்
சிரித்தாலும் சலித்தாலும்
உன்னையே நினைக்கத் தூண்டும்
நீ... இங்கே இருக்க
என்... காதலை எங்கே கரைப்பேன்...???
விடை... சொல்வாய் நீ...!!!
நீ... என்... விடை... !!!
0 comments:
Post a Comment