நாகரீகம் கடந்து நவீனத்தை தொட்ட மனிதன் நடிப்பை மட்டும் புறந்தள்ளவே இல்லை. சொல்லிக் கொடுத்ததை நடிக்கும் சினிமாக்காரர்களைப் பற்றி நான் இங்கு பேச வரவில்லை. சந்தர்ப்பத்தின் பெயரிலோ, நிர்ப்பந்தத்தின் பெயரிலோ ... இல்லை சுயநலத்திற்காகவோ, பொதுநலத்திற்காகவோ போலிப் போர்வைகளை போர்த்திக் கொண்டு பாரினை வலம் வரும் ஒவ்வொரு மானிடனும் நடிகன் தான். ( உலகம் ஒரு நாடக மேடை என்று சும்மாவா சொன்னாங்க..?)
நாலு நாள் சுகத்திற்க்காக காதலைக் காட்டும் காதலன்... பணத்தைக் கறக்க காதலைச் சுரக்கும் காதலி... இது போன்ற வக்கிர புத்தி கொண்ட சுயநலங்களே நடிப்பென்று நீங்கள் நினைத்தால் இந்தப் பதிவு உங்களுக்கு மிகவும் பொருந்தும்.
பல நாள் கதைக்காமல் திடீர் என்று சந்தித்த நண்பரைப் பார்த்து "Phone No miss ஆகிட்டு ", "Call எடுத்தன் answer இல்ல", "வீட்டுக்கு வந்தன், கதவு பூட்டி இருந்தது".. போன்ற காரணங்களை காட்டி நட்பை காக்கும் நிர்ப்பந்தத்தில் நீங்கள் நடிததில்லையா ???
கண்டும் காணாதது போல போன சொந்தங்கள் திடீர் என்று உங்களின் சுகம் விசாரிப்பதாய் நடித்து அவர்களின் காரியங்களுக்கு உங்களிடம் உதவி வாங்கியதில்லையா ??? இல்லை நீங்கள் தான் அப்படி செய்ததே இல்லையா ???
நீங்கள் இல்லை என்று தலை அசைத்தாலும் உள்மனது எத்தனயோ "ஆம்" களைச் சொல்லும்.
சில போது நிர்ப்பந்தங்கள் மனிதனை நடிக்குமாறு கட்டாயப் படுத்துவது யார் வித்தித்த விதியோ தெரியவில்லை...
சதையை விற்று சந்தோசத்தை கொடுக்கும் விலைமகள் கூட நடிக்கிறாள், வறுமையின் வதை தாங்காமல்...,
ஏன், தொழில் இல்லாதவன் பிச்சைக்காரனாய் நடிக்கிறான், வயிற்றுப் பசியின் கொடூரம் தாங்காமல்,...
இதையெல்லாம் தாண்டி இன்னும் நீங்கள் "நாம் எல்லோரும் நடிக்கிறோம்" என்பதை ஏற்க மறுக்கிறீர்களா ???
சங்கடமான சந்தர்ப்பங்களில் உங்கள் கைத் தொலைபேசியின் பொத்தானை போலியாக அழுத்துவது ஒரு நடிப்பில்லையா ?
தமிழில் பேசிக் கொண்டிருந்த நீங்கள் நாலு பேர் கடப்பதைக் கண்டவுடன் போலியாக ஆங்கிலம் பேசுவதும் ஒரு நடிப்பில்லையா ?
இல்லை, ஆறுயிராய் வேண்டப்பட்ட ஒருவர் உங்களை குறுக்கிட திடீர் என போலிப் பணிவை காட்டுவது தான் நடிப்பில்லையா ???
எல்லாம் நடிப்பு தான், நல்லதோ கெட்டதோ , நாம் நடிக்கத்தான் செய்கிறோம். இதில் நானோ நீங்களோ விதிவிலக்குகள் அல்ல.
"என்னடா, முளைச்சு மூணு கொழுந்து விடல்ல , இதெல்லாம் பேசுறான்"
என்று நினைக்காதீங்க.
கடைசியா ஒரு விஷயத்த சொல்லிட்டு போகிறேன். அண்மையில் கேட்ட ஒரு பாடல் வரி யாபகத்திற்கு வருகிறது.
"நடிக்காத ஒரே தெய்வம் அம்மா தானடா "
( தாயை நான் நேசிப்பவன், ஆனால் தாயை தெய்வத்திற்கு சமனாக்கும் கொள்கை எனக்கில்லை )
ஈரக்கண்ணை கசக்கிக் கொண்டு பொய்யாக ஒரு சிரிப்பைக் காட்டி, ஈன்ற குழந்தையின் வலியைப் போக்க எத்தனை முறை அவள் நடித்திருப்பாள். இந்தச் சுயநலமற்ற நடிப்பை அவளால் தான் செய்ய முடியும்.
இது தான் வாழ்வின் இயல்பு. வேஷத்தை நம்பும் இவ்வுலகில் சில சமயங்களில் நம்மை நாமே தோலுரித்துக் காட்டினால் தொனியிழந்து போவோம்.
அது தான், "நடிப்பின்றி நாமில்லை"
நடிப்போம் ... சுயநலமின்றி, பொதுநலம் காத்துக்கொண்டு, தன்நலம் பேணிக் கொண்டு...!!!
Showing posts with label வாழ்க்கை. Show all posts
Showing posts with label வாழ்க்கை. Show all posts

