ஏன் இந்த வலைப்பூ ?


நீண்ட நாட்களாக வலைப்பூ (Blog) ஒன்றை தொடங்குவதற்காக ஆசை. ஆனால் தொடங்கலாம் ... தொடருமா??? என்ற உறுத்தல்  இருந்தே வந்தது. பல நாள் யோசனைக்குப் பின் மனதில் உதித்த முடிவின் விளைவே இந்த தமிழ் வலைப்பூ. தமிழில் வேறு ஆங்கிலத்தில் வேறு என இரு வேறு வலைப்பூக்களை நடாத்த திட்டமிட்டுள்ளேன். தாய் மொழிக்கே முதலிடம், ஆகவே முதல் கட்ட பதிவுகளை தமிழிலேயே பதிகிறேன். விரைவில் ஆங்கில வலைப்பூவும் நிறுவப்படும். 

 சுவாரஸ்யமான, சுற்றி நடக்கின்ற மற்றும் சமூகம் சார்ந்த விடயங்களை அலட்டாமல் அலசுவதே இந்த வலைப்பூவின் நோக்கம். அது பல்வேறு வித்தியாசமான  தலைப்புகளின் கீழ் அமையும். இடையிடையே கவிதைப் பதிவுகளும் இடம்பெறும். இப்படி நிறைய கனவுகளுடன் என் சிந்தனைகளை சிதற விடுகிறேன்... அள்ளிக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது . கனவுகளை நனவாக்குவதில் உங்கள் பங்கும் இன்றியமையாதது.

 இந்த வலைத்தள உருவாக்கத்தில் இரண்டு நட்புள்ளங்களிற்கு  நன்றி சொல்லியே ஆக வேண்டும். இருவருமே ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் தந்து என்னை ஊக்கப்படுத்தினார்கள். இதற்கு மேலும் உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை. Mohamed Shifan, Shihnas Ahamed. இவர்களே அந்த இருவரும் .
 
கடைசியாக , 
தொடருங்கள் என் பதிவுகளை ; பதியுங்கள் உங்கள் கருத்துகளை. (Follow பண்ணுங்க ; Comment போடுங்க ) 
"வலைப்பூவில் வசந்தங்கள் தொடரும் இனிதே ...."