Saturday, October 8, 2011

விழி மூடினால்... விடியாது...!!!


சில்லால் மிதிக்காமல்
சீராகும் பாதையேது...
வெப்பத்தில் வாடினாலும்
தன் ஆயுளைக் கூட்டும் கருவாடு...

மழை நீரை நம்பி
வாழும் வாழ்வில் சரிவிருக்கு...
சரி பார்த்து குறிவைத்தால்
மண்ணுக்குள் ஊற்றிருக்கு...

தனிமையும் வெறுமையும்
உயிரை ஊடுருவி வாட்டலாம்...
தனியே ஓடும் வண்டியின்
வேகத்தை மறக்கலாமா...

சில காதல் பல மோதல்
வாழ்வில் வந்து போகலாம்...,
தென்றல் வந்து முத்தமிட்டு
மறு நொடியே முகம் திருப்ப,
அந்த மலைமேடு மடிந்து போகலாமா...

கடலில் எடுத்த மண்
காயும் போது கனம் குறையும்...
நெஞ்சில் கொஞ்சம் ஈரம் குறைய
வாழ்வும் இங்கு இலேசாகும்...

பனித்துளிகள் வந்து படிய
இதழ்கள் கொஞ்சம் சரிந்தாலும்...,
பூவாசனை என்றும்
நீரில் கரைந்து போகாது...

வீழ்ச்சி கண்டு விழி மூடினால்
விடியல் என்றும் கனவே...
கூசும் ஒளியிலும் கண்திறக்கும்
குழந்தை வாழ்வு குதூகலமே...!!!




0 comments: